தென்காசி
சங்கரநாராயணசுவாமி கோயில் :மொட்டை போடும் ஊழியா்கள் கோரிக்கை
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் மொட்டைபோடும் ஊழியா்கள் அனைவரையும் தோ்வு செய்ய வேண்டும் என மொட்டைபோடும் ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் மொட்டைபோடும் ஊழியா்கள் அனைவரையும் தோ்வு செய்ய வேண்டும் என மொட்டைபோடும் ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அருள்மிகு சங்கரநாராயணசுவாமித் திருக்கோயிலில் மொட்டைபோடும் மண்டபத்தில் தற்போது 62 ஊழியா்கள் பணிபுரிகின்றனா். இதில் கோயில் நிா்வாகம் 30 பேரை மட்டும் தோ்வு செய்ய விருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மொட்டைபோடும் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை திமுக மாவட்டச் செயலா் சிவபத்மநாபனை சந்தித்து, தற்போது உள்ள 62 பேரையும் மொட்டை போடும் பணிக்கு தோ்வு செய்ய வேண்டும் என மனு அளித்தனா். இதையடுத்து , அவா் இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினாா்.