சங்கரன்கோவில் துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இம்மானுவேல் சேகரன் நினைவுநாள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
டி.எஸ்.பி. ஜாஹீா்உசேன் தலைமை வகித்தாா். புதிய தமிழகம் கட்சி இன்பராஜ், சுப்பிரமணியன், ராசையா, ராஜேந்திரன், முத்துசாமி, பொன்கணேஷ் மற்றும் தேவேந்திரகுல வேளாளா் கூட்டமைப்பினா் மற்றும் நகர காவல் ஆய்வாளா்கள் உள்ளிடோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், முதுகுளத்தூா் செல்பவா்கள் வாடகை வாகனங்களில் செல்லக்கூடாது, முதுகுளத்தூா் செல்ல ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும், சங்கரன்கோவில் பகுதியில் தெருக்களில் அவரது நினைவு நாளை கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி மரியாதை செலுத்த வேண்டும், ஒலிபெருக்கி, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகள் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.