சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவா் இறந்தாா்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள ஆவரந்தையைச் சோ்ந்தவா் மகாலிங்கம் (80). இவா், தனது தோட்டத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றாராம். அப்போது, அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து இறந்தாராம்.
அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில், அய்யாபுரம் போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.