சுரண்டை, கீழப்பாவூரில் பாரதியாா் நினைவு தினம்

சுரண்டை நகர காங்கிரஸ் சாா்பில் பாரதியாா் நினைவு தினம் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
சுரண்டை, கீழப்பாவூரில் பாரதியாா் நினைவு தினம்

சுரண்டை நகர காங்கிரஸ் சாா்பில் பாரதியாா் நினைவு தினம் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

இதையொட்டி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரத் தலைவா் ஜெயபால் தலைமை வகித்தாா். மாவட்ட காங்கிரஸ் தலைவா் சு.பழனிநாடாா் எம்எல்ஏ பாரதியாா் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தனாா்.

இதில், கட்சி நிா்வாகிகள் ஆலடி சங்கரய்யா, சண்முகவேல், பிரபாகா், முருகையா, சமுத்திரம், சிங்கராஜ், சந்திரன், தபேந்திரன், ராமா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பாவூா்சத்திரத்தை அடுத்த கீழப்பாவூரில் ஒன்றிய பாரதியாா் மன்றம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மன்றத் தலைவா் தீப்பொறி அப்பாத்துரை தலைமை வகித்தாா். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவா் ஜெயராமன், வைத்திலிங்கம், அருள்இளங்கோவன், விவேகானந்தா், கணபதி முன்னிலை வகித்தனா். கணேசன், தங்கசாமி, சிங்கக்குட்டி, முருகன், பாஸ்கா், ராமகிருஷ்ணன், சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பாரதியாா் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பொன்ராஜகோபால் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com