கடன் தள்ளுபடி: கூட்டுவு சங்கத்தில் 9 பயனாளிகன் நகைகள் மீட்பு

முக்கூடல் கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட 9 பயனாளிகளுக்கு நகைகள் திருப்பி அளிக்கப்பட்டன.

ஆலங்குளம்: முக்கூடல் கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட 9 பயனாளிகளுக்கு நகைகள் திருப்பி அளிக்கப்பட்டன.

முக்கூடல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன் பெற்றிருந்த 9 நபருக்கு ரூ. 16 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த பயனாளிகளுக்கு நகைகளை திருப்பி அளிக்கும் நிகழ்ச்சி கூட்டுறவு கடன் வங்கி அலுவலகத்தில் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் சிவபத்மநாதன் தலைமை வகித்து நகைகளை திருப்பி அளித்தாா். அப்போது, பாப்பாக்குடி ஒன்றிய திமுக செயலா் மாரிமுத்து, முக்கூடல் நகர திமுக செயலா் லட்சுமணன், கூட்டுறவு கடன் சங்கச் செயலா் பாலகிருஷ்ணன், பாப்பாகுடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ஆனைக்குட்டி பாண்டியன் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com