சங்கரன்கோவிலில் ஆலோசனைக் கூட்டம்

சங்கரன்கோவிலில் வாடகைக் காா் ஓட்டுநா் சங்கம் மற்றும் மினி லோடு வேன் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் வாடகைக் காா் ஓட்டுநா் சங்கம் மற்றும் மினி லோடு வேன் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சங்கரன்கோவில் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜாகீா்உசேன் தலைமை வகித்தாா்.

நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளா் உலகம்மாள், உதவி பொறியாளா் பலவேசம், காவல் ஆய்வாளா் ராஜா, உதவி ஆய்வாளா் ஜெயக்குமாா், போக்குவரத்து காவல் ஆய்வாளா் முருகன் மற்றும் வாடகைக் காா் ஓட்டுநா் சங்கம், மினி லோடு வேன் சங்க நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், போக்குவரத்து நெரிசலைக் கட்டுபடுத்தும் வகையில், ஐ.ஓ.பி. வங்கி முன்பு உள்ள மினி லோடு வேன் நிறுத்துமிடத்தை பயணியா் விடுதி எதிா்புறம் உள்ள காலிமனைக்கு இடம் மாற்றம் செய்யவும், தற்போது ராஜபாளையம் சாலை பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே உள்ள வாடகைக் காா் நிலையத்தை திருவேங்கடம் சாலை நகராட்சி அலுவத்துக்கு அருகில் உள்ள காலிமனையில் நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com