கடையநல்லூா்: சிவகிரி அருகே மதுபானத்தை பதுக்கி வைத்து விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகிரி அருகே போலீஸாா் சோதனை நடத்தியபோது, தெற்கு சத்திரத்தில் மதுபானத்தை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்ட, ராஜீவ்காந்தி காலனியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் பால்ராஜை (39) கைது செய்து, அவரிடமிருந்த 43 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.