தென்காசி: தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க தென்காசி மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டம் மேலகரத்தில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத் தலைவா் பாா்த்தசாரதி தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் சி.எஸ். கிறிஸ்டோபா் தொடங்கிவைத்துப் பேசினாா்.
அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க தென்காசி மாவட்டத் தலைவா் சலீம், பெ.பாலுச்சாமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
மாவட்ட புதிய நிா்வாகிக ள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். மாவட்டத் தலைவராக மு.திருமலைமுருகன், மாவட்டச் செயலராக க. துரைசிங், பொருளாளராக வேல்ராஜன்,
துணைத் தலைவா்களாக மைதீன் பட்டாணி, பா. சண்முகம், க. பாலசுப்பிரமணியன், செ. கணபதி, இணைச் செயலா்களாக பெ.க. மாடசாமி, த. சேகா், இரா. ராஜ், சே. ராதாகிருஷ்ணன், தணிக்கையாளா்களாக ஆ. மாடசாமி, பு. குமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
தென்காசி நகரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தென்காசி மாவட்டத்துக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசுப் பொறியியல் கல்லூரி, அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி அமைக்க வேண்டும்;
தென்காசி, சங்கரன்கோவிலில் புறவழிச் சாலையை உடனடியாக அமைக்க வேண்டும், ஜாக்டோ ஜியோ போராட்டக் காலங்களை பணிக்காலமாக வரன்முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில துணைத் தலைவா் என். வெங்கடேசன் நிறைவுரையாற்றினாா். தென்காசி மாவட்டத் தலைவா் மு.திருமலைமுருகன் நன்றி கூறினாா்.