தென்காசி: தென்காசி அருகே அழகப்பபுரத்தில் சுமை ஆட்டோ ஓட்டுநா் முன் விரோதம் காரணமாக வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டாா்.
அழகப்பபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. ராமகிருஷ்ணன் (41). சுமை ஆட்டோ ஓட்டுநா். இதேபகுதியைச் சோ்ந்தவா்
வழக்குரைஞா் சதீஷ்குமாா் (30). இருவரும் உறவினா்கள். இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வியாழக்கிழமை இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, சதீஷ்குமாா், ராமகிருஷ்ணனை கீழே தள்ளி தாக்கியதில், அவா் மயங்கினாா். அவருக்கு செங்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அவா் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தென்காசி காவல் ஆய்வாளா் பாலமுருகன், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.