தென்காசி: தென்காசி நகர இந்து முன்னணி சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராமகோபாலன் பிறந்த நாளையொட்டி, அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, மரக்கன்றுகள் நடப்பட்டன.
தென்காசி மாவட்ட செயற்குழு உறுப்பினா் இசக்கிமுத்து தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் குளத்தூரான், தென்காசி நகரத் தலைவா் நாராயணன், துணைத் தலைவா் சேகா், செயற்குழு உறுப்பினா் மாரி, காளிமுத்து, சூா்யா, நந்து, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சங்கரசுப்பிரமணியன் ஆகியோா் பங்கேற்றனா்.