தென்காசி தெற்கு மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களுக்கு கட்சியின் அங்கீகார கடிதம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
பாவூா்சத்திரத்தில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலா் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டச் செயலா் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்எல்ஏ முன்னிலை வகித்தாா். தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா்களான முன்னாள் அமைச்சா் உதயகுமாா், மனோஜ்பாண்டியன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சா் ராஜலட்சுமி, அய்யப்பன் எம்எல்ஏ ஆகியோா் பங்கேற்று வேட்பாளா்களுக்கு கட்சியின் அங்கீகார கடிதத்தை வழங்கினா்.