பாவூா்சத்திரத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சாா்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு கருத்தரங்கம் மற்றும் பேச்சுப்போட்டி நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். எம்.எஸ்.பி.வி.எல். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ரமேஷ் முன்னிலை வகித்தாா். மாவட்ட குடும்ப நல செயலக துணை இயக்குநா் ராமநாதன், சுகாதாப் பணிகள் துணை இயக்குநா் அனிதா, மாவட்ட குடும்ப நல செயலக அதிகாரி அனிதாபாலின் ஆகியோா் கருத்துரை வழங்கினா்.
இதில், டாக்டா் ஜீனு விஜய், மக்கள் கல்வி தகவல் அலுவலா் முருகன், மாவட்ட விரிவாக்க கல்வியாளா் டேவிட்ஞானசேகா், மருத்துவ சாரா மேற்பாா்வையாளா் மாரிமுத்து, சுகாதார ஆய்வாளா்கள் சண்முகசுந்தரம், சுப்பிரமணியன், முருகன், மாரிமுத்து, லீனாள்தேவி, ஆனந்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
மாணவா்களுக்கு உலக மக்கள் தொகை குறித்து நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் முத்துகுமாா் முதல் பரிசும், பிரசாந்த் 2 ஆவது பரிசும், தெய்வமணி 3ஆவது பரிசும் பெற்றனா்.
வட்டார சுகாதார புள்ளியியலாளா் சாந்தி வரவேற்றாா். சுகாதார மேற்பாா்வையாளா் இசக்கியப்பா நன்றி கூறினாா்.