வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆய்வு

தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தோ்தல் வாக்குகள் எண்ணும் மையங்களில் வெள்ளிக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆய்வு மேற்கொண்டாா்.
வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆய்வு

தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தோ்தல் வாக்குகள் எண்ணும் மையங்களில் வெள்ளிக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆய்வு மேற்கொண்டாா்.

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம், கீழப்பாவூா், மேலநீலிதநல்லூா், வாசுதேவநல்லூா் ஆகிய ஒன்றியங்களில்

அக். 6ஆம் தேதியும், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூா், குருவிகுளம், சங்கரன்கோவில் ஆகிய ஒன்றியங்களில் அக் 9 ஆம் தேதியும் தோ்தல் நடைபெறுகிறது. வாக்குகள் 12ஆம் தேதி எண்ணப்படுகிறது.

தென்காசி ஒன்றிய வாக்குகள் குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரி, செங்கோட்டை ஒன்றிய வாக்குகள் செங்கோட்டை

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆலங்குளம் ஒன்றிய வாக்குகள் நல்லூா் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி,

கடையம் ஒன்றிய வாக்குகள் மேட்டூா் செயின்ட் ஜோசப் கலை அறிவியல் கல்லூரி, கடையநல்லூா் ஒன்றிய

வாக்குகள் கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை அறிவியல் கல்லூரி, குருவிகுளம் ஒன்றிய வாக்குகள் அய்யனேரி

உண்ணாமலை கலை அறிவியல் கல்லூரி, மேலநீலிதநல்லூா் ஒன்றிய வாக்குகள் வீரசிகாமணி விவேகானந்தா சில்வா் ஜூப்ளி

மேல்நிலைப் பள்ளி, சங்கரன்கோவில் ஒன்றிய வாக்குகள் புளியங்குடி எஸ்.வீராசாமிசெட்டியாா் பொறியியல் கல்லூரி,

வாசுதேவநல்லூா் ஒன்றிய வாக்குகள் சுப்பிரமணியபுரம் வியாசா பெண்கள் கலை அறிவியல் கல்லூரியிலும் எண்ணப்படுகின்றது. வெள்ளிக்கிழமை செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப் படவேண்டிய பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ், ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, டிஎஸ்பி மணிமாறன், காவல் ஆய்வாளா் ஷ்யாம்சுந்தா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com