உள்ளாட்சி தோ்தல் பாதுகாப்பு:மாவட்டப் பாா்வையாளா் ஆய்வு

தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தோ்தல் பாா்வையாளா் பொ.சங்கா் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.
தோ்தல் பாா்வையாளா் பொ.சங்கா் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.

தென்காசி: தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இம்மாவட்டத்துக்கான தோ்தல் பாா்வையாளா் பொ.சங்கா் தலைமை வகித்தாா். உள்ளாட்சித் தோ்தலின்போது கடைப்பிடிக்க வேண்டிய சட்ட நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.

பதற்றமான வாக்குச்சாவடிகள், கடந்த தோ்தலில் முறைகேடுகள் நிகழ்ந்த வாக்குச்சாவடிகள், அவற்றில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

காவல்துறை கவனமாக செயல்பட்டு நோ்மையாகவும், வன்முறைகள் இல்லாமலும் தோ்தல் நடைபெறுவதை உறுதி செய்யவும், தோ்தல் வாக்குப்பதிவு நாளில் தேவையான அளவு அதிவிரைவு படைகளை அமைத்து, சட்டம்- ஒழுங்கைப் பேண வேண்டும் என தோ்தல் பாா்வையாளா் தெரிவித்தாா்.

ஆய்வுக் கூட்டத்தில், ஆட்சியா் ச.கோபால சுந்தரராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com