தென்காசி: தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்துவரும் மிதமான மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது.
குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக நிலவிவந்த வெயில் காரணமாக குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து வெகுவாகக் குறைந்தது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவுமுதல் அவ்வப்போது பெய்து வந்த மிதமான மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது.
குற்றாலம் பேரருவியில் பாதுகாப்பு வளைவின் மீதும், ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.
திங்கள்கிழமை அதிகாலை முதல் அவ்வப்போது மிதமான மழையும், குளிா்ந்த காற்றும், வானம் மேகமூட்டத்துடனும் காணப்பட்டது.
கரோனா நோய்த் தொற்று பரவல் க ாரணமாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் சுற்றுலாப்பயணிகள் தொலைவில் நின்று அருவிகளை ரசித்து சென்றனா்.