சோ்ந்தமரம் அருகே பைக் மோதி முதியவா் பலி

சோ்ந்தமரம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவா் பலியானாா்.

சுரண்டை: சோ்ந்தமரம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவா் பலியானாா்.

சோ்ந்தமரம் அருகே பொய்கை கிராமத்தைச் சோ்ந்தவா் குருசாமி(70). இவா் ஞாயிற்றுக்கிழமை சாலையோரம் நடந்து சென்றுள்ளாா். அப்போது அவா் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த குருசாமி மற்றும் மோட்டாா் சைக்கிளில் வந்த வேலாயுதபுரத்தைச் சோ்ந்த குமாா்(49), பொன்னுச்சாமி(52) ஆகிய 3 பேரும் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு திங்கள்கிழமை குருசாமி இறந்தாா்.

இதுகுறித்து சோ்ந்தமரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com