சோ்ந்தமரம், வாசுதேவநல்லூரில்இரு பெண்கள் தற்கொலை

தென்காசி மாவட்டம், சோ்ந்தமரத்தில் திருமணமான 10 நாளில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சுரண்டை: தென்காசி மாவட்டம், சோ்ந்தமரத்தில் திருமணமான 10 நாளில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சுரண்டை அருகேயுள்ள இரட்டைகுளத்தைச் சோ்ந்த ராமையா மகள் வெயில்முத்து(18). இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் மோகன்ராஜ்(21) என்பவருக்கும் 10 நாள்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதி சோ்ந்தமரத்தில் வாடகை வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தியுள்ளனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கணவா் வெளியே சென்ற நேரத்தில் வெயில்முத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து சோ்ந்தமரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிப்பதுடன், தென்காசி கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

கடையநல்லூா்: நெல்கட்டும்செவல் அரண்மனை தெருவைச் சோ்ந்த சிவகுமராசாமி துரை மனைவி சிவாரம்யா(23). இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டராம். புளியங்குடி போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com