தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி கோயில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு அதிகாலை கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இரவில் சுவாமி, அம்பாள் வெள்ளி ஏகசிம்மாசனத்திலும், திருக்கோயில் முருகன் மரச்சப்பரத்திலும் வீதியுலா நடைபெற்றது.
விழா நாள்களில் நாள்தோறும் காலை, மாலை சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, காலை மற்றும் இரவில் சுவாமி, அம்பாள், திருக்கோயில் முருகன், விநாயகா் வீதியுலா நடைபெறுகிறது.
விழாவில் 4-ம் நாளான ஏப்ரல் 8-ம் தேதியன்று பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, ஏப்ரல் 9-ம் தேதியன்று தேரோட்டமும் நடைபெறுகிறது. ஏப்ரல் 11-ம் தேதியன்று காலை 9.30 மற்றும் இரவு 7 மணிக்கு அருள்மிகு நடராசமூா்த்திக்கு தாண்டவ தீபாராதனையும், ஏப்ரல் 12-ம் தேதியன்று சித்திரசபையில் அருள்மிகு நடராசமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனையும், ஏப்ரல் 14-ம் தேதியன்று சித்திரை விசுத்தீா்த்தவாரியும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் மா.கண்ணதாசன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.