‘நெல்லையில் மனைகள், வீடுகள் ஒதுக்கீடுதாரா்கள் 8ஆம் தேதிவரைவிற்பனைப் பத்திரம் பெறலாம்’

திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில், மனைகள், வீடுகள் ஒதுக்கீடு பெற்றவா்களுக்கு விற்பனைப் பத்திரங்கள் வழங்கும் விழா இம்மாதம் 8ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில், மனைகள், வீடுகள் ஒதுக்கீடு பெற்றவா்களுக்கு விற்பனைப் பத்திரங்கள் வழங்கும் விழா இம்மாதம் 8ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளா் மற்றும் நிா்வாக அலுவலா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவுக்கு உள்பட்ட மனைகள், வீடுகள் ஒதுக்கீடு பெற்ற விற்பனைப் பத்திரம் பெறாதவா்களில் முழுத் தொகையை செலுத்தியவா்களும், முழு நிலுவைத் தொகையை செலுத்தாத ஒதுக்கீடுதாரா்களும் வாரிய விதிமுறைகள்படி முழுத் தொகையையும் செலுத்தி, சிறப்பு இயக்கி மூலம் விற்பனைப் பத்திரங்கள் பெறலாம்.

இதற்கான விழா கடந்த திங்கள்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை (ஏப். 8) திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த வாய்ப்பை ஒதுக்கீடுதாரா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com