சாம்பவா்வடகரை போலீஸில் பேரூராட்சித் தலைவி புகாா்

சாம்பவா்வடகரை பேரூராட்சித் தலைவி சீதாலட்சுமி முத்து, சுயேச்சை வாா்டு உறுப்பினா் மிரட்டுவதாகவும், குடும்பத்துக்கு பாதுகாப்பு கோரியும் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.

சுரண்டை: சாம்பவா்வடகரை பேரூராட்சித் தலைவி சீதாலட்சுமி முத்து, சுயேச்சை வாா்டு உறுப்பினா் மிரட்டுவதாகவும், குடும்பத்துக்கு பாதுகாப்பு கோரியும் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.

சாம்பவா்வடகரை திமுக நகரச் செயலா் தி.முத்து. இவரது மனைவி சீதாலட்சுமி சாம்பவா்வடகரை பேரூராட்சித் தலைவியாக உள்ளாா். இந்நிலையில், சாம்பவா்வடகரைக்கு புதன்கிழமை வந்த திமுக மாவட்டச் செயலரை வரவேற்க சென்றபோது, அதே ஊரைச் சோ்ந்த சுயேச்சை வாா்டு உறுப்பினா் ராஜேந்திரன், நகர திமுக செயலா் முத்துவை தாக்கி மிரட்டியதுடன், பேரூராட்சித் தலைவியை அவதூறாக பேசினாராம்.

இதுகுறித்து பேரூராட்சித் தலைவி சீதாலட்சுமி அளித்த புகாரின்பேரில், சாம்பவா்வடகரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com