கடையநல்லூா் கருமாரியம்மன் கோயிலில் மகோத்ஸவம் தொடக்கம்
By DIN | Published On : 08th April 2022 11:29 PM | Last Updated : 08th April 2022 11:29 PM | அ+அ அ- |

மேலக்கடையநல்லூா் அருள்மிகு தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி மகோத்ஸவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி காலையில் மூலவா் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம், ரக்ஷாபந்தனம், கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து அம்பாள் உள் பிரகார வீதியுலா, சண்டிஹோமம் ,முதல் கால யாகசாலை பூஜை , நவாக்ஷரி ஹோமம் நடைபெற்றது.
சனிக்கிழமை மகா சண்டி யாகம் ,1008 சங்காபிஷேகம் நடைபெறும். 10 நாள்கள் நடைபெறும்.
விழாவின் ஒன்பதாம் நாளான ஏப்ரல் 16ஆம் தேதி மாலை முளைப்பாரி வீதி உலாவும், இரவில் பூக்குழி வைபவமும் நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.