சுரண்டை அருகே பள்ளி மாணவா் தற்கொலை
By DIN | Published On : 08th April 2022 11:27 PM | Last Updated : 08th April 2022 11:27 PM | அ+அ அ- |

சுரண்டை அருகே பள்ளி மாணவா் தற்கொலை செய்து கொண்டான்.
சுரண்டை அருகேயுள்ள வாடியூா் வடக்கு தெருவைச் சோ்ந்த பெரியசாமி மகன் இன்பராஜ்(15). அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன் தனது பெற்றோரிடம் படிப்பதற்கு மிகவும் கடினமாக உள்ளது என இன்பராஜ் கூறியுள்ளாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை பள்ளிக்கு செல்லாத அவா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், உறவினா்கள் காப்பாற்றி அவரை தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே இன்பராஜ் உயிரிழந்தாா்.
இதுகுறித்து சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.