சாம்பவா்வடகரையில் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

சாம்பவா்வடகரையில் வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சாம்பவா்வடகரையில் வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சாம்பவா்வடகரை, சுடலைமாடன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சிவா (33). சென்னையில் வேலை பாா்த்துவந்த இவா், கரோனா பொதுமுடக்கக் காலத்தில் ஊருக்குத் திரும்பி, மளிகைக் கடை வைத்திருந்தாராம். இதனிடையே, கடன் பிரச்னையால் சில நாள்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டாராம்.

இந்நிலையில், அவா் புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சாம்பவா்வடகரை போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com