தேசிய அளவிலான போட்டியில் இலஞ்சி பாரத் பள்ளி மாணவா் சிறப்பிடம் பெற்றாா்.
பள்ளி விளையாட்டு மற்றும் செயல்பாடு மேம்பாடு நிறுவனம், பிட் இந்தியா இயக்கம் மற்றும் இந்திய இளைஞா் விளையாட்டுத் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு தேசிய அளவில் தடகளப் போட்டிகளை நடத்தியது.
தில்லியிலுள்ள மதா் கஜானி கான்வென்ட் பள்ளியில் நடைபெற்ற இப் போட்டியில் 180 மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில் இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி மாணவா் அருண் சந்தோஷ் 100, 400 மீ தடகள போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பெற்று, தங்கம் பதக்கம் பெற்றாா்.
இம் மாணவர பள்ளி கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி மோகனகிருஷ்ணன், முதல்வா் வனிதா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.