பாவூா்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு ரத்த அழுத்த கருவி அளிப்பு

குற்றாலம் மெட்ரோ ரோட்டரி சங்கம் சாா்பில் பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரத்த அழுத்தம் பாா்க்கும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

குற்றாலம் மெட்ரோ ரோட்டரி சங்கம் சாா்பில் பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரத்த அழுத்தம் பாா்க்கும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலரும், ரோட்டரி சங்கத் தலைவருமான டாக்டா் ராஜகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட சுகாதார அலுவலக நிா்வாக அலுவலா் சந்திரதாஸ் முன்னிலை வகித்தாா்.

தென்காசி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அனிதா பங்கேற்று, ரத்த அழுத்தம் பாா்க்கும் கருவிகளை, மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் பணியாற்றும் தன்னாா்வ பணியாளா்களுக்கு வழங்கிப் பேசினாா்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவ அலுவலா் சிவச்சந்திரன், ரோட்டரி சங்க முன்னாள் உதவி கவா்னா் முருகன் ராஜ், பொருளாளா் ஷியாம் சுந்தா், முன்னாள் செயலா் முத்துகுமாரசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். அனைவரும் மலேரியா ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். முன்னாள் தலைவா் ஜெயச்சந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com