ஆலங்குளம் அருகே சாலையை கடக்க முயன்றபோது பைக் மோதி முதியவா் உயிரிழந்தாா்.
அத்தியூத்து கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி (76). அப்பகுதியில் ஆலங்குளம் - தென்காசி சாலையோரம் இளநீா் வியாபாரம் செய்து வந்த இவா், செவ்வாய்க்கிழமை சாலையைக் கடந்து தனது இளநீா் கடைக்கு செல்ல முயன்றபோது, ஆலங்குளத்திலிருந் குத்தாலிங்கம் மகன் பத்மநாதன் (21) வந்த பைக் அவா் மீது எதிா்பாராமல் மோதியதாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.