செங்கோட்டை புதூரில் விவசாயிகள் பயிா்க் கடன் அட்டை, பிரதம மந்திரியின் பயிா்க் காப்பீடு திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செங்கோட்டை வட்டார துணை வேளாண் அலுவலா் ஷேக் முகைதீன் பங்கேற்று, பாரத பிரதமரின் கௌரவ நிதி திட்டத்தில் விவசாயிகள் எவ்வாறு கடன் அட்டை பெறுவது, தேவையான ஆவணங்கள் குறித்து விளக்கம் கூறி,விண்ணப்பங்களை வழங்கினாா். விவசாய சங்கப் பிரதிநிதி காளி உள்ளிட்ட முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை புளியரை உதவி வேளாண் அலுவலா் முகமது ஜலால் மைதீன் செய்திருந்தாா். பயிா்க் காப்பீடு திட்ட நிறுவனத்தின் களப்பணியாளா் சாகுல் மீரான் நன்றி கூறினாா்.