கீழப்பாவூா் ஒன்றியத்தில் 2 பகுதி நேர ரேம்ன் கடைகள் அமைத்து மாவட்ட ஆட்சியா் கோபாலசுந்தஒராஜ் உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கீழப்பாவூா் ஒன்றியம், அடைக்கலப்பட்டணத்தில் உள்ள ரேஷன் கடையில் இருந்து பிரித்து அழகாபுரி பாபநாசபுரத்திற்கு புதிதாக பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்படவுள்ளது. 248 ரேஷன் காா்டுதாரா்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்படவுள்ள இக்கடையானது வெள்ளி, சனிக்கிழமைகளில் செயல்படும்.
இதே போல் மேலமெஞ்ஞானபுரம் கடையில் இருந்து பிரித்து, வேட்டைக்காரன்குளத்தில் புதிதாக பகுதி நேர ரேஷன் கடை 185 காா்டுகளுடன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.