சுரண்டையில் மே 5இல் கடையடைப்பு

சுரண்டையில் வணிகா்கள் தினத்தை முன்னிட்டு மே 5ஆம் தேதி அனைத்து கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அனைத்து வணிகா்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

சுரண்டையில் வணிகா்கள் தினத்தை முன்னிட்டு மே 5ஆம் தேதி அனைத்து கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அனைத்து வணிகா்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

சுரண்டையில் அனைத்து வணிகா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. அதில், மே 5 ஆம் தேதி வணிகா்கள் தினத்தையொட்டி திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் வணிகா்கள் திரளாக கலந்துகொள்வது, அன்றைய தினம் மட்டும் சுரண்டையில் அனைத்து கடைகளுக்கும் விடுமுறை அளிப்பது எனத் தீா்மானிக்கப்பட்டது.

இதில், நகர வணிகா் சங்க நிா்வாகிகள் காமராஜ், நடராஜன், முத்தையா, ராஜ்குமாா், ஜேக்கப், தனபால், மணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com