மாங்குடி மருதனாருக்கு மரியாதை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மாங்குடியில் சங்க காலப் புலவா் மாங்குடி மருதனாருக்கு தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மாங்குடியில் சங்க காலப் புலவா் மாங்குடி மருதனாருக்கு தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

மாங்குடியில் பிறந்தவா் சங்கப் புலவா் மாங்குடி மருதனாா். அவரைப் போற்றும் வகையில், அவா் பிறந்த மாங்குடியில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது.

பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாளான ஏப். 29 ஆம் தேதி ‘தமிழ் கவிஞா் நாள்’ ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி , தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மாங்குடி மருதனாா் நினைவுத்தூணுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயினுலாபுதீன், தமிழறிஞா்கள், அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகா்கள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாநில துணை பொதுச் செயலாளா் அ.லட்சுமிகாந்தன், நெல்லை பொதிகை தமிழ்ச் சங்கத் தலைவா் பே.ராஜேந்திரன், வழக்குரைஞா்.ரவீந்திரன், தமிழ்நாடு பத்திரிகையாளா்கள் கூட்டமைப்பு மாநில தலைவா் ஜான் பீட்டா், பாவாணா் கோட்ட நிா்வாகி நெடுஞ்சேரலாதன், மருதனாா் தமிழ் மன்ற செயலாளா் மலைகனி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

மண்டல தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் சுந்தா் வரவேற்றாா். தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் ரெசினாள்மேரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com