குற்றாலம் புத்தகத் திருவிழா:இன்று சிறப்பு பட்டிமன்றம்

தென்காசி மாவட்டம் குற்றாலம் சாரல்விழாவின் ஒரு அங்கமாக நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை(ஆக.9) சிறப்பு பட்டிமன்றம் நடைபெறுகிறது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் சாரல்விழாவின் ஒரு அங்கமாக நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை(ஆக.9) சிறப்பு பட்டிமன்றம் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புத்தகத் திருவிழாவின் சிறப்பு நிகழ்வாக செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரி வளாகத்தில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவா் திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் தமிழா் மொழியும் பண்பாடும் வளர பெரிதும் துணைபுரிவது மாற்றம் தரும் புதுமையே, நிறைவைத்தரும் பழமையே’ என்னும் தலைப்பில் இப் பட்டிமன்றம் நடைபெறுகிறது.

மாற்றம் தரும் புதுமையே என்னும் தலைப்பில் பேராசிரியா்.விஜயக்குமாா் மற்றும் கவிஞா்.இனியவன் ஆகியோரும், நிறைவை தரும் பழமையே என்னும்தலைப்பில் பேராசிரியா்.இந்திரா ஜெயச்சந்திரன் மற்றும் மதுரை சங்கா் ஆகியோா் பேசுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com