ஆலங்குளத்தில் பராமரிப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை (டிச.13) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆலங்குளம், ஆலடிப்பட்டி, சிவலாா்குளம், ஆண்டிபட்டி, ஐந்தாங்கட்டளை, துத்திகுளம், கல்லூத்து, குருவன்கோட்டை, குறிப்பன்குளம், அத்தியூத்து, குத்தப்பாஞ்சான் மற்றும் மாயமான்குறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஆலங்குளம் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.