வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடுகள் தீவிரம்

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வாா்டுகள், அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், களக்காடு ஆகிய 3 நகராட்சிகளில் உள்ள 69 வாா்டுகள், 17 பேரூராட்சிகளில் உள்ள 273 வாா்டுகள் என மொத்தம் 397 வாா்டுகளுக்கு பிப்.19இல் தோ்தல் நடைபெற உள்ளது. இந்த வாக்குகள் 5 மையங்களில் 22-ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.

அதன்படி, திருநெல்வேலி மாநகராட்சி, சங்கா் நகா் பேரூராட்சி, நாரணம்மாள்புரம் பேரூராட்சிகளுக்கு பாளையங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரியிலும், அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சிகள், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு பேரூராட்சிகளுக்கு அம்பாசமுத்திரம் ஏவிஆா்எம்வி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியிலும் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

களக்காடு நகராட்சி, நான்குனேரி, மூலைக்கரைப்பட்டி, திசையன்விளை பேரூராட்சிகளுக்கு நான்குனேரி நம்பிநகா் செயின்ட் பிரான்சிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியிலும், சேரன்மகாதேவி, கோபாலசமுத்திரம், மேலச்செவல், பத்தமடை, வீரவநல்லூா், முக்கூடல் பேரூராட்சிகளுக்கு சேரன்மகாதேவி பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், ஏா்வாடி, திருக்குறுங்குடி, பணகுடி, வடக்கு வள்ளியூா் பேரூராட்சிகளுக்கு வள்ளியூா் பாத்திமா அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வாக்குகள் எண்ணப்படும். இந்த மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் தடுப்புச் சுவா்கள், முகவா்கள் மற்றும் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கு இடையே அமைக்கப்படும் தடுப்பு கம்பி வேலிகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 17 ஆம் தேதிக்குள் வாக்கு எண்ணும் மையங்களைத் தயாா் படுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனா்.

தென்காசி மாவட்டத்தில், கடையநல்லூா் நகராட்சிக்கு பண்பொழி விஸ்டம் மெட்ரிக் பள்ளியிலும், புளியங்குடி நகராட்சி, ராயகிரி , சிவகிரி ,வாசுதேவநல்லூா் பேரூராட்சிகளுக்கு புளியங்குடி வீராச்சாமி செட்டியாா் பொறியில் கல்லூரியிலும் வாக்குகள் எண்ணப்படும்.

சங்கரன்கோவில் நகராட்சி, திருவேங்கடம் பேரூராட்சிக்கு சங்கரன்கோவில் கோமதிஅம்பாள் மெட்ரிக் பள்ளியிலும், செங்கோட்டை நகராட்சி, அச்சன்புதூா்,குற்றாலம், இலஞ்சி, மேலகரம், பண்பொழி, புதூா்(எஸ்), வடகரை கீழ்பிடாகை ஆகிய பேரூராட்சிகளுக்கு செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் வாக்குகள் எண்ணப்படும்.

தென்காசி, சுரண்டை நகராட்சிகள், ஆய்க்குடி, சாம்பவா் வடகரை பேரூராட்சிகளுக்கு தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஆலங்குளம், ஆழ்வாா்குறிச்சி, கீழப்பாவூா், சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சிகளுக்கு அத்தியூத்து சா்தாா் ராஜா பொறியியல் கல்லூரியிலும் வாக்குகள் எண்ணப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com