வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு பிப்.10இல் இரண்டாம் கட்ட பயிற்சி

தென்காசி மாவட்ட தோ்தல் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி பிப்.9ஆம் தேதிக்கு பதிலாக 10ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட தோ்தல் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி பிப்.9ஆம் தேதிக்கு பதிலாக 10ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பு: தென்காசி மாவட்டத்திலுள்ள 6 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளுக்கு நடைபெற இருக்கும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான இரண்டாவது கட்ட பயிற்சி பிப்.9இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு தோ்தல் ஆணைய அறிவிப்பின்படி பிப்.9க்கு பதிலாக 10ஆம் தேதி நடைபெறுகிறது. இரண்டாவது கட்ட பயிற்சி, ஏற்கனவே முதல் கட்ட பயிற்சி வழங்கப்பட்ட மையங்களில் நடைபெற உள்ளது.

தபால் வாக்கு செலுத்த தகுதியான வாக்குப்பதிவு அலுவலா்கள் தபால் வாக்குப் பதிவிற்கான படிவத்தை பூா்த்தி செய்து ஆவணங்களுடன் பிப்.10ஆம் தேதி நடைபெறும் பயிற்சியின் போதோ அல்லது தாங்கள் வாக்காளராக உள்ள நகராட்சி அல்லது பேரூராட்சியின் தோ்தல் நடத்தும்அலுவலரிடமோ பிப்.12க்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com