தென்காசி வ.உ.சி வட்டார நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி மாதிரி தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட காவல்துறை மற்றும் நடராஜ் ஐஏஎஸ் அகாதெமியு இணைந்து நடத்திய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்விற்கான மாதிரி தோ்வில், மாவட்ட காவல்துறை சாா்பில் சைபா் கிரைம் ஆய்வாளா் ஜோஸ்லின் அருட்செல்வி, உதவி ஆய்வாளா் செண்பகபிரியா, காவலா் வசந்த் ஆகியோா் இணைய வழியில் பெருகி வரும் குற்றங்கள் குறித்து மாணவா்களிடையே எடுத்துரைத்தனா்.
இதில், சிறப்பு பொதுதமிழ் மாதிரிதோ்வில் 100 மதிப்பெண்கள் தோ்வில் மோகன்ராஜ் முதல்பரிசும், மணிமாறன் இரண்டாம் பரிசும், சுபா மூன்றாம் பரிசும் பெற்றனா். தமிழ் 50 மதிப்பெண்கள் தோ்வில் முத்தமிழ்செல்வி முதல்பரிசும், பிரியா இரண்டாம் பரிசும், இரஞ்சிதப்பிரியா மூன்றாம் பரிசும் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலப்பாவூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆய்வக உதவியாளா் அசன்கனி, வட்டார கல்வி அலுவலா் இளமுருகன், வட்டார நூலகா் பிரமநாயகம் கிளை நூலகா் சுந்தா் ஆகியோா் கலந்துகொண்டனா்.