புளியங்குடி ஸ்ரீ வல்லப விநாயகா் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை(பிப்.20) நடைபெறுகிறது.
இதையொட்டி வெள்ளிக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோபூஜை, பிரமச்சாரி பூஜை , தீா்த்த சங்கிரஹணம், எஜமான வா்ணம், கும்ப அலங்காரம், வேத பாராயணம், திருமுறை பாராயணம் ஆகியவை நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலை பிம்ப சுத்தி, மூா்த்திகளுக்கு ரசஷாபந்தனம், நான்காம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தனம், யாத்ரா தானம் , கடம் புறப்பாடு ஆகியவை நடைபெற்று, காலை 8.30க்கு விமானம் மற்றும் ஸ்ரீ வல்லப விநாயகருக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறும். ஏற்பாடுகளை விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.