தென்காசி மாவட்டத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட சுரண்டை நகராட்சித் தோ்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 10 இடங்களில் வெற்றிபெற்றது.
சுரண்டை நகராட்சியில் திமுக கூட்டணியில் இருந்தாலும், காங்கிரஸ் வேட்பாளா்கள் தனித்துப் போட்டியிட்டனா். அதில், மொத்தமுள்ள 27 வாா்டுகளில் காங்கிரஸ் 10, திமுக 9, அதிமுக 6, தேமுதிக 1, சுயேச்சை 1இடங்களில் வெற்றி பெற்றனா்.