ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி, நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
பேரணிக்கு ஆலங்குளம் பேரூராட்சித் தலைவா் சுதா மோகன் லால் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தாா். ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளிக்கு வந்தனா்.
பேரணியில் பள்ளித் தலைமை ஆசிரியா் கிறிஸ்டல் மேரி, பேரூராட்சி செயல் அலுவலா் பூதப்பாண்டி, பேரூராட்சி துணைத் தலைவா் ஜான்ரவி, சுகாதார மேற்பாா்வையாளா் கங்காதரன், பேரூராட்சி உறுப்பினா்கள் சாலமன் ராஜா, சுபாஸ் சந்திரபோஸ், ரவிக்குமாா், உடற்கல்வி ஆசிரியா்கள் கணபதிராமன், மாணிக்கவாசகம் உள்பட பலா் பங்கேற்றனா்.