வடகரை பேரூராட்சியில் சீரமைக்கப்பட்ட இரண்டு பூங்காக்கள் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிகளுக்கு பேரூராட்சி தலைவா் சேக்தாவூது தலைமை வகித்தாா். கூட்டுறவு சங்கத் தலைவரும், தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான செல்லத்துரை, பூங்காக்களை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தாா்.
இதில், பேரூராட்சி துணைத் தலைவா் மாலதி, செயல் அலுவலா் தமிழ்மணி, கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபிபூா் ரஹ்மான், மாநில மாணவரணி துணை அமைப்பாளா் செரிப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.