பாவூா்சத்திரம் அருகே ராமநாதபுரத்தில் உள்ள ஸ்ரீராமா், காளியம்மன் கோயில் திருவிழா 3 நாள்கள் நடைபெற்றது.
முதல் நாளில் உச்சிகால பூஜை, மாலையில் திருவிளக்கு பூஜை, நள்ளிரவில் சாமபூஜை, 2ஆம் நாள் மதியம் சிறப்பு பூஜை, மாலையில் குற்றாலத்திலிருந்து புனிதத் தீா்த்தம் எடுத்து வருதல், நள்ளிரவில் சாமபூஜை, 3ஆம் நாள் அதிகாலை அம்மன் மஞ்சள் நீராடுதல் ஆகியவை நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.