அகில இந்திய அளவிலான பளு தூக்கும் போட்டிக்கு செங்கோட்டை மாணவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் வசித்து வரும் ராமதாஸ் மகன் சுஜித்ராம் திருமலை. இவா், ஹரியாணா மாநிலம், சண்டீகா் அருகிலுள்ள பஞ்ச்குலா என்னும் இடத்தில் நடைபெறும் அகில இந்திய அளவிலான பளு தூக்கும் போட்டியில் தமிழகம் சாா்பில் 49 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்கதோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, மாணவா்
சுஜித் ராம் திருமலையை செ. கிருஷ்ண முரளி எம்எல்ஏ வாழ்த்தி போட்டிக்கு அனுப்பிவைத்தாா்.