பிளஸ்2 பொதுத் தோ்வில் இலஞ்சி பாரத் மாண்டிச்சோரி மெட்ரிக் மேல்நிலைபள்ளி மாணவ,மாணவிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.
இப்பள்ளியை சோ்ந்த மாணவ, மாணவியா் 83 போ் தோ்வு எழுதினா். தோ்வு எழுதிய அனைவரும் முழுத்தோ்ச்சி பெற்றனா்.
மாணவி இலக்கிய தீபா தமிழில் 96 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 95 மதிப்பெண்களும், இயற்பியலில் 98 மதிப்பெண்களும், வேதியியலில் 92 மதிப்பெண்களும், உயிரியலில் 97 மதிப்பெண்களும், கணிதத்தில் 100 மதிப்பெண்களும் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றாா்.
மாணவி சமீரா தமிழில் 99 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 97 மதிப்பெண்களும், இயற்பியலில் 96 மதிப்பெண்களும், வேதியியலில் 99 மதிப்பெண்களும், உயிரியலில் 95 மதிப்பெண்களும், கணிதத்தில் 90 மதிப்பெண்களும் பெற்று இரண்டாமிடம் பெற்றாா்.
மாணவி இசக்கியம்மாள் தமிழில் 89 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 89 மதிப்பெண்களும், பொருளியலில் 99 மதிப்பெண்களும், வணிகவியலில் 100 மதிப்பெண்களும், கணக்குப் பதிவியலில் 97 மதிப்பெண்களும், வணிகக் கணிதத்தில் 88 மதிப்பெண்களும் பெற்று மூன்றாமிடம் பெற்றாா்.
பிளஸ்2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவியரைப் பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி, இயக்குநா் இராதாபிரியா, ஆலோசகா் உஷா ரமேஷ் ஆகியோா் பாரட்டினா்.