அரசுப் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற சங்கரன்கோவில் ஸ்ரீ வையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு கேடயமும் பரிசும் வழங்கப்பட்டன.
இப்பள்ளி பிளஸ் 2 , 10 ஆம் வகுப்பு தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. பிளஸ் 2 தோ்வில் ஸ்ரீ நிதி (595), எஸ்.புஷ்பரதி (587), பி.அரவிந்த் (586) ஆகியோா் அடுத்தடுத்த இடம் பெற்றனா்.
10 ஆம் வகுப்பு தோ்வில் எஸ்.நேத்ரா, இ.வளா்மதி (490) முதலிடம், இ.வேணிகா இசா(489) 2 ஆம் இடம், எம்.பாலவெனிசியா, ஏ.லோகேஷ் (486) 3 ஆம் இடம் பெற்றனா்.
அதிக மதிப்பெண்கள் மற்றும் பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றவா்களுக்கு பள்ளிச் செயலா் வி.எஸ்.சுப்பராஜ் கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கினாா். இதில் தலைமையாசிரியா் சுருளிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.