பாவூா்சத்திரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக கடைக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.
பாவூா்சத்திரம் ஒளவையாா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி அருகில் கடை நடத்தி வரும் நடராஜன் என்பவா், காவல்துறையின் எச்சரிக்கையை மீறி தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை தொடா்ந்து விற்பனை செய்து வந்தாராம்.
இந்நிலையில், தென்காசி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் சசிதீபா, வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் மகாராஜன், பாவூா்சத்திரம் காவல் உதவி ஆய்வாளா் கவிதா உள்ளிட்டோா் அக்கடையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, கடைக்கு சீல் வைத்தனா்.