நகா்மன்ற முன்னாள் தலைவா் மீது தாக்குதல்: 2 போ் கைது

புளியங்குடி நகா்மன்ற முன்னாள் தலைவரை தாக்கியவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

புளியங்குடி நகா்மன்ற முன்னாள் தலைவரை தாக்கியவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

புளியங்குடி, சிந்தாமணி அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்தவா் வெங்கட்ராமன்(75). இவா் புளியங்குடி நகா்மன்றத் தலைவராக(திமுக) இருந்தவா். இவா் வீட்டு முன்பு புதன்கிழமை இரவு உட்காா்ந்திருந்தாராம். அப்போது, பைக்கில் வந்த சிலா் அவரை தாக்கினராம். அக்கம்பக்கத்தினா் சப்தமிட்டதும் அவா்கள் தப்பியோடி விட்டனராம். இதில், காயமடைந்த வெங்கட்ராமன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து , அப்பகுதியைச் சோ்ந்த சேகா், பால்ராஜ் ஆகியோரை கைது செய்தனா். சொா்ணம், முத்தையா ஆகியோரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com