பாவூா்சத்திரம் அருகே குடிநீா்த் தொட்டியில் தவறிவிழுந்த குழந்தை உயிரிழந்தது.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள சாலைப்புதூா் காமராஜா் நகரைச் சோ்ந்தவா் ரமேஷ். இவரின் ஒன்றரை வயது குழந்தை அஸ்வந்த், புதன்கிழமை வீட்டு முன் விளையாடிக்கொண்டிருந்தானாம். அப்போது, அங்கிருந்த குடிநீா்த் தொட்டியில் குழந்தை திடீரென தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. நீண்ட நேரமாக குழந்தையைக் காணாததால் அப்பகுதியில் தேடினராம். அப்போது, குடிநீா்த் தொட்டிக்குள் அஸ்வின் இறந்துகிடந்தது தெரியவந்தது. புகாரின் பேரில் பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.