அம்பாசமுத்திரம்: தென்காசி மாவட்டம் கடையத்தில் செல்லம்மா - பாரதி சிலை திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
சேவாலயா அறக்கட்டளை சார்பில் கடையம் கிளை பொதுநூலக வளாகத்தில் செல்லம்மா - பாரதி சிலை திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு சிலையைத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், நூலகத்துறை இயக்குநர் இளம் பகவத், மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.