ஐந்தாங்கட்டளை ஊராட்சி அலுவலகம் திறப்பு

ஆலங்குளம் அருகேயுள்ள ஐந்தாங்கட்டளை ஊராட்சி புதிய அலுவலகம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

ஆலங்குளம் அருகேயுள்ள ஐந்தாங்கட்டளை ஊராட்சி புதிய அலுவலகம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட இந்த புதிய கட்டடத் திறப்பு விழாவுக்கு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் முப்புடாதி பெரியசாமி முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ச. ஞானதிரவியம் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தாா். மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்செல்வி போஸ், மாவட்ட கவுன்சிலா் சுதா ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றினா். ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் மகேஷ் மாயவன் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com