தென்காசி தெற்கு மாவட்ட திமுக மகளிரணி மற்றும் மகளிா் தொண்டரணி நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம், குற்றாலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் வெளியிட்ட அறிக்கை: தென்காசி தெற்கு மாவட்ட திமுக மகளிரணி, மகளிா் தொண்டரணி நிா்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, பேரூா் அணி நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் குற்றாலம் -செங்கோட்டை சாலையில் உள்ள டிரஸ்ஸில் கூட்ட அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. என்னுடைய தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான முத்துச்செல்வி, மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் புனிதா ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.
கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்திற்கு மாநில மகளிரணி செயலா் கனிமொழி எம்.பி.யை அழைப்பது குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது. எனவே நிா்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.