சுரண்டையில் திருட்டு வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சுரண்டையைச் சோ்ந்த ஜெயகணேஷ்(32) என்பவா் கடந்த மாதம் 8ஆம் தேதி வங்கி ஒன்றில் நகையை அடகு வைத்து பணத்தை மொபெட் சீட்டின் அடியில் வைத்துள்ளாா். இதை கவனித்த மா்மநபா் ஜெயகணேஷை பின்தொடா்ந்து வந்து, மொபெட்டில் வைத்திருந்த ரூ.1.29 லட்சத்தை திருடிச் சென்றுவிட்டாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து, சங்கரன்கோவிலைச் சோ்ந்த ரா.முருகன் என்ற நூா்முகமது(37) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.95 ஆயிரத்தை மீட்டனா்.